12 மணி நேர வேலையை எதிர்த்து போராடிய இ.ஜ.வா சங்கத்தினர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து

Madurai High Court

தமிழக அரசின் 12 மணி நேர வேலை திட்டத்தை எதிர்த்து போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி வழக்கு.. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது பதியபட்ட  வழக்கை ரத்து செய்து  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

12 மணி நேர வேலை திட்டத்தை அரசே திரும்ப பெற்று உள்ள நிலையில் மாணவர்கள் மீது வேண்டுமென்றே போலிஸ்சார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர் மனுதாரர் தரப்பில் வாதம்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சார்பாக வழக்கறிஞர் போனிபாஸ் உள்ளிட்ட 26 பேர் உயர்நீதிமன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்த மனு

தமிழக அரசு கொண்டுவந்த 12 மணி நேர வேலை உறுதிச் சட்டத்தை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் மதுரை பெரியார் பேருந்து நிலையம் எதிரே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்  மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உறுப்பினர் மாணவர்களின் மீது மதுரை திடீர் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு அவசர அவசரமாக மதுரை மாவட்ட விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும்  தாக்க செய்யப்பட்டது.

இதனால் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் வேலைக்கு செல்வதில் பிரச்சனையும் வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் , வாகன ஓட்டுநர் உரிமம் எடுப்பதில் பிரச்சனையும்  ஏற்பட்டது.

எனவே தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை வழக்கறிஞர் போனிபாஸ் உள்ளிட்ட   26 நபர்கள்  உயர்நீதிமன்ற கிளையில் மனு செய்தனர்.

இந்த மனு  நீதிபதி நாகார்ஜூன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழக அரசு கொண்டு வந்த 12 மணி நேரம் வேலை சட்ட மசோதாவை எதிர்த்து தமிழகத்தில்  பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அந்த சட்டத்தை திரும்ப பெற்றது ஆனால் காவல்துறையினர் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது வழக்குப்பதிந்து அவசர அவசரமாக மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர் இது ஏற்கத்தக்கது அல்ல அரசை அதன் சட்டத்தை திரும்ப பெற்றுள்ளது என வாதிட்டார்.

இந்த  வாதத்தை பதிவு செய்த நீதிபதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது பதியபட்ட  வழக்கை ரத்து செய்து  உத்தரவு பிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *