பாஜகவை யாரும் எதுவும் பேசக்கூடாது… அதிமுக திடீர் வேண்டுகோள்

பிஜேபி கட்சி குறித்து அதிமுக நிர்வாகிகள் யாரும் பேசக்கூடாது என முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் வேண்டுகோள். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற நடை பயணத்தின் போது  அண்ணாவை குறித்து  விமர்சனம் செய்தார்.  இதற்கு அதிமுக முன்னாள் முன்னாள் அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக இளைஞரணி நிர்வாகிகள் சார்பில் பிஜேபி  தலைவர் அண்ணாமலை குறித்த விமர்சனம் செய்து சுவரொட்டிகள் ஒட்டினர். இதனால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற அதிமுக பூத்துக் கமிட்டி அமைக்கும் நிர்வாகிகள் கூட்டம் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.  

இந்த கூட்டத்தில் அவர் பேசும்போது பிஜேபி மற்றும் கூட்டணி கட்சிகள் குறித்து யாரும் பேசக்கூடாது மற்றும் தலைமை முடிவெடுக்கும் வரை யாரும் பிஜேபி உள்ளிட்ட  கூட்டணி கட்சிகள் குறித்து யாரும் பேசயோ விமர்சனம் செய்து சுருட்டி கிலோ ஒட்டக்கூடாது என்று அவர் தலைமையில் இருந்து உத்தரவு வந்தால் ஓட ஓட விரட்டும் வகையில் நாம் செயல்பட வேண்டும் என அவர் தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார்.  

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் என் சின்னதுரை உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *