உதயநிதியை தரகுறைவாக பேசிய அதிமுக மாவட்ட செயலாளரை கைது செய்ய கோரி புகார்
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து தரகுறைவாகவும் இழிவாகவும் பேசிய அதிமுக மாவட்ட செயலாளரை கைது செய்ய கோரி நள்ளிரவில் திமுகவினர் சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரையும் தரக்குறைவாகவும் இழிவாகவும் பேசிய கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வலியுறுத்தி சின்னசேலம் ஒன்றிய குழு பெருந்தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் சின்னசேலம் காவல் நிலையத்தில் நள்ளிரவில் புகார் மனு அளித்தனர் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு வெளியே கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளரை கண்டித்து திமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் ரிஷிவந்தியம் திருக்கோவிலூர் உள்ளிட்ட காவல் நிலையங்களிலும் அதிமுக மாவட்ட செயலாளருக்கு குமரகுருவை கைது செய்ய வலியுறுத்தி திமுகவினர் புகார் மனு அளித்தனர்