அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த ஓபிஎஸ் வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் 

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த ஓபிஎஸ் வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் ஓபிஎஸ் சொந்த ஊரான பெரியகுளத்தில் ஈபிஎஸ் ஆதரவு அதிமுகவினர் பட்டாசு வெடிக்கும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக ஓபிஎஸ் உட்பட நான்கு பேர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு இன்று ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்தது.  ஓபிஎஸ் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் உள்ளார்.

இந்நிலையில் பெரியகுளம் தென்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு ஈபிஎஸ் ஆதரவு அதிமுகவின்ர உயர்நீதிமன்றம் தீர்ப்பை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும்  கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பெரியகுளம் நகர பொறுப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க உள்ளிட்ட கோசங்களை எழுப்பி தொண்டர்கள் மகிழ்ச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *