எடப்பாடி பி.ஏ. படித்திருந்தால் அதற்கு கையெழுத்து போட்டவர் கலைஞர்… ஆ.ராசா காட்டம்
வர இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மோடியையும், அமித்ஷாவையும் வீட்டுக்கு அனுப்ப எந்த சின்னத்தில் ஓட்டு போட வேண்டுமோ அதில் ஓட்டு போடுங்கள் – எடப்பாடிக்கு ஒரு பக்கம் டிராப்ட் எழுத தெரியுமா? எடப்பாடி பி.ஏ.படித்திருந்தால் அதற்கு கையெழுத்து போட்டவர் கலைஞர் தான் – நீட்
விவகாரத்தில் குடியரசுத் தலைவர் கையெழுத்து போட்டாலும் நான் போட மாட்டேன் என்று ஆளுநர் ரவி சொல்வது எந்த அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிறது ஆளுநர் ரவி மீது ஆ.ராசா காட்டம்
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் இன்று இரவு நடந்தது. தஞ்சை தெற்கு மாவட்ட மற்றும் பட்டுக்கோட்டை நகர திமுக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏவுமான அண்ணாதுரை தலைமை வகித்தார்.
கூட்டத்தில் திமுக துணை பொது செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், வர இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மோடியையும், அமித்ஷாவையும் வீட்டுக்கு அனுப்ப எந்த சின்னத்தில் ஓட்டு போட வேண்டுமோ அதில் ஓட்டு போடுங்கள். ஒரு காட்டுமிராண்டி ஆட்சி செய்து கொண்டிருக்கிறான் மணிப்பூரில். பிரதமரும், உள்துறை அமைச்சரும் அதை ஆதரிக்கிறார்கள்.
அந்த பிரதமரை என்ன பெயர் சொல்லி அழைப்பது என்று பட்டுக்கோட்டையில் உள்ள சான்றோர்களிடமே விட்டுவிடுகிறேன். கலைஞருக்கு பேனா சின்னம் எதற்கு என்று எடப்பாடி கேட்கிறார்? எடப்பாடிக்கு ஒரு பக்கம் டிராப்ட் எழுத தெரியுமா? எடப்பாடி பி.ஏ. படித்தார் என்கிறார்கள். அப்படி பி.ஏ. அவர் படித்திருந்தால் அதற்கு கையெழுத்து போட்டவர் கலைஞர் தான்.
நீட் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் கையெழுத்து போட்டாலும் நான் போட மாட்டேன் என்று ஆளுநர் ரவி சொல்கிறார். அப்படி எந்த அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிறது என்று காட்டமாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கேள்வி எழுப்பினார். கூட்டத்தில் 1,000க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.