ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்.
நீட் தேர்வு எதிர்ப்பு உட்பட பல்வேறு தமிழ்நாடு நலன் சார்ந்த திட்டங்களை தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றிய நிலையில் மசோதாக்களுக்கும் அனுமதி வழங்காமல் கிடப்பில் போடப்பட்டது.
தமிழ்நாடு அரசு கல்வித்துறை அறிவித்திருக்கின்ற மாநில பொது பாடத்திட்டத்தை பல்கலைக்கழகங்கள் ஏற்க வேண்டியது இல்லை என கூறும் ஆளுநர் ஆர்.என் ரவி
கோவையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவிற்காக வரும் 24 ஆம் தேதி கோவை வரும்போது அவருக்கு அனைத்து முற்போக்கு அமைப்புகளின் சார்பில் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்த உள்ளதாக தபெதிக அறிவித்துள்ளது.