ஆருத்ரா மோசடி வழக்கில் அண்ணாமலையை விசாரிக்க வேண்டுமென கோரிக்கை

annamalai

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் பாஜக மாநில மாநில தலைவர் அண்ணாமலைக்கும் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க வேண்டுமென  சமூக ஆர்வலர் நர்மதா  அண்ணா அசாரே வேடத்தில் வந்து  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்துள்ளார்.

ஆருத்ரா நிதி நிறுவனம் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கிளைகளை உருவாக்கி அதிக வட்டி தருவதாக மக்களை நம்ப வைத்து அதன் மூலம்  2438 கோடி ரூபாய்  மிகப்பெரிய மோசடி  நடத்தியுள்ளது.

இந்நிலையில் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாஜக நிர்வாகி ஹரிஸ் என்பவர் பாஜக விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டியின் நெருங்கிய நண்பர் என்பதும்

ஆருத்ரா நிதி நிறுவன மூலம் பொது மக்களின் ஆயிரம் கோடி மோசடி செய்த பணத்தில்  ஹரிஸ்  அமர் பிரசாத்திடம் பணத்தை கொடுத்து வைத்திருப்பதாகவும்.

அத்தகைய பணத்தை அமர் பிரசாத் ரெட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு 100 கோடி ரூபாய் மேல் நன்கொடையாக கொடுத்திருப்பதாகவும்.

அத்தகைய பணத்தை வைத்துக் கொண்டுதான் அண்ணாமலை தற்போது பாதயாத்திரை செய்து வருவதாகவும். இதனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் விளையாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டியும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவர்களை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர் நர்மதா  என்பவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு  அண்ணா ஹசாரே வேடத்தில் வந்து மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு அளித்து இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *