சாதிய மதவாத சக்திகளை அடக்க காவல்துறையில் தனி பிரிவு வேண்டும்… எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி

தமிழ்நாட்டில் சாதிய மதவாத சக்திகளை கண்காணிப்பதற்கு காவல்துறையில் தனி பிரிவை உருவாக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.

வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்த விடுதலை சிறுத்தைகளின் கட்சி கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி பின்னர் செய்தியாளரிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர் பல்வேறு குற்ற நடவடிக்கைகளை கண்டுபிடிக்க காவல்துறையில் கியூ பிரிவு மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு இருப்பது போன்று தமிழ்நாட்டில் சாதிய மதவாத சக்திகளை கண்காணிப்பதற்கு காவல்துறையில் தனி பிரிவை உருவாக்க வேண்டும் என கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளதை சட்டமன்றத்தில் நானும் பேசி உள்ளேன் எனவே தமிழக அரசு உடனடியாக சாதிய மதவாத சக்திகள் கண்காணிப்பதற்கு காவல்துறையில் தனி பிரிவை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தேசிய கல்வி நிறுவனங்களுக்கான பரிந்துரையை அமல்படுத்த அமைக்கப்பட்ட கமிட்டியை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *