திமுகவின் தொண்டனுக்காக வாழ்கிறேன்; அமைச்சர் இ.பெரியசாமி உருக்கம்
திமுக இயக்கத்தின் தொண்டனுக்காக வாழ்கிறேன். அமைச்சர் இ.பெரியசாமி உருக்கமான பேச்சு. செம்பட்டியில் நடைபெற்ற வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டத்தில், பேசிக்கொண்டிருந்தபோது, நாவு தழுவினர்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில், ஆத்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், வாக்குசாவடி நிலை முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் முருகேசன் வரவேற்று பேசினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான, இபெ.செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
ஆத்தூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ராமன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், மாவட்ட கழக பொருளாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில், அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு பேசுகையில் மத்தியில் சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
திமுக தொண்டன், மிசா பொடா சட்டத்தைப் பார்த்து அஞ்சியது கிடையாது. வரும் பாராளுமன்றத் தேர்தலை துணிவோடு எதிர் நின்று சந்திக்க வேண்டும். நான் தொண்டனுக்காக வாழ்கிறேன். எனக்கு உறவினர்கள், எல்லாம் இந்த இயக்கமும் தொண்டனும் தான். நான், இந்த இயக்கத்தின் தொண்டனை பற்றி சிந்திக்காத நாள் கிடையாது.
திமுக தொண்டன் எந்த நேரம் ஆனாலும், என்னை சந்தித்து பேசலாம். உங்களுக்காக நான் இருக்கிறேன். என, உருக்கமாக பேசினார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது, அவரது நாவு தழுவியது. தொடர்ந்து பேசிய அவர், வரும் பாராளுமன்ற தேர்தலில், தொண்டர்கள், இளைஞர்கள் துடிப்புடன் தேர்தல் பணியாற்ற வேண்டும்.
வெற்றி ஒன்றே நமது இலக்காக இருக்க வேண்டும். தமிழகத்திலே சிறந்த மாவட்டமாக, முதலமைச்சர் முக.ஸ்டாலினுடன் நல்ல பெயர் வாங்கும் விதமாக, திண்டுக்கல் மாவட்டம் செயல்பட வேண்டும். திமுக கோட்டையாக திண்டுக்கல் திகழ வேண்டும் இவ்வாறு பேசினார். கூட்டத்தில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன் மற்றும் திமுக மாவட்ட, ஒன்றிய, பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.