என்.எல்.சியில் நடப்பது மண்ணையும் மக்களையும் பாதுகாக்கும் போராட்டம் -அன்புமணி ராமதாஸ்
நெய்வேலி நடக்கும் போராட்டம் மண்ணையும் மக்களையும் விவசாயத்தையும் பாதுகாக்கும் போராட்டம். போராட்டத்தில் ஈடுபட்ட 55 பேர்களை கைது செய்து மதுரை, பாளையங்கோட்டை மத்திய சிறைகளில் மாற்றுவது ஏற்புடையது அல்ல . அவர்கள் தீவிரவாதிகள் அல்ல. என்எல்சி நிறுவனம் நெய்வேலி இருந்து வெளியேற வேண்டும். தமிழக அரசு என்எல்சி நிறுவனத்திற்காக நிலங்களை கையகப்படுத்தக் கூடாது .
தமிழக அரசு 64 ஆயிரத்து 750 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு அளிப்பதாக அறிவித்துள்ளனர் . இதில் 40 ஆயிரம் ஏக்கர் நிலம் அழிக்கப்பட்டு விட்டது. எஞ்சி உள்ள 25 ஆயிரம் நிலங்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு உடந்தையாக உள்ளது.
நெய்வேலியில் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என ஒன்றிய அரசு கூறி உள்ளது.
இதற்காக 26 கிராமங்களை அழித்து 12,500 ஏக்கரை கையகப்படுத்த உள்ளனர். காவிரி டெல்டா பகுதியில் புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்க மாட்டோம் என தமிழக அரசு கூறியது .
எனவே மூன்றாவது சுரங்கம் அமைக்கும் பணி தொடங்கக்கூடாது .இதனை எதிர்த்து 300 கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. என்எல்சி நிறுவனம் தொடர்ந்து நடைபெற வேண்டுமென்றால் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்து மின்சாரம் தயாரித்துக் கொள்ள வேண்டும் .
தூத்துக்குடியில் என்எல்சி நிறுவனம் இதைத்தான் செய்து வருகிறது நெல்லையில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.