தனக்கு வாக்களிக்காத எல்லோருமே சாத்தானின் பிள்ளைகள் என உலறும் சீமான்; கு.இராமகிருட்டிணன் கோபம்
தனக்கு வாக்களிக்காத மக்களை சைத்தானின் பிள்ளைகள் என கூறும் சீமான் அடுத்து தொண்டர்கள் மீதும் பாய்வார்- தபெதிக பொதுசெயலாளர் கு.இராமகிருட்டிணன். தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தபெதிக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் :
விரக்தியின் உச்சிக்கு சென்றுள்ள சீமான், தமிழில் கூறும் ஆட்டை கடித்து மாட்டை கடித்து மாமியார் ஒரு நாட்டில் மனிதனை கடித்தால் என்ற பழமொழி போல தற்போது அரை நாள் ஒரு மணி நேரம் ஆட்சியை கொடுங்கள் என்று மக்களிடையே கெஞ்சிக் கொண்டிருந்த சீமான் தனக்கு வாக்களிக்காத எல்லோருமே சாத்தானின் பிள்ளைகள் என உலரத் தொடங்கி இருக்கின்றார்கள்.
கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் சைத்தானின் பிள்ளைகள் என சீமான் விரக்த்தியின் உச்சியில் பேசியிருக்கிறார். அதற்கு காரணமாக தனக்கு வாக்களிக்காமல், திராவிட கழகங்களான திமுகவிற்கும் அதிமுகவிற்கும் வாக்களித்தவர் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் இந்த 18 சதவிகிதத்தால் தான் திமுக ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததால் தான் விலைவாசி உயர்ந்துள்ளது வேலை இல்லா திண்டாட்டம் உள்ளது என்ற ஒரு புதுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே செல்கிறார்.
சீமான் கட்சியை துவக்கிய காலத்தில் அதிமுகவை ஆதரித்தவர். இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என ஊர் ஊராகச் சென்று பேசியவர் இவர். அப்போது அண்ணா திமுகவிற்கு வாக்கு கேட்ட சீமான் யாருடைய பிள்ளை?. சைத்தானின் வப்பாட்டி பிள்ளையா? அப்படித்தான் நமக்கு நினைக்க தோன்றும். எனக்கு வாக்களிக்காதவர்கள் எல்லாம் சைத்தான் சீமான் கூறினால் திமுக விற்கு இந்துக்களும் தான் வாக்களிக்கிறார்கள்.
சீமான் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சீமானின் பேச்சுக்கள், உடல் அசைவுகளை பார்த்து ஏமாந்து கொண்டிருக்கிற தமிழக இளைஞர்களே இப்படி ஒரு பைத்தியத்தை தலைவராக வைத்து கொண்டு, தமிழ்நாட்டை சீரழிக்க வேண்டும் ஆனால் புரிந்து கொள்ளுங்கள் சீமானின் தம்பிகளும் புரிந்து கொள்ளுங்கள். தனக்கு வாக்களிக்காத மக்களை சைத்தானின் பிள்ளைகள் என கூறும் சீமான் அடுத்து உங்கள் மீதும் பாய்வார், எச்சரிக்கையாக இருங்கள் என தெரிவித்தார்.