அனிதா ராதாகிருஷ்ணன் மீதான  சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு 

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான  சொத்து குவிப்பு வழக்கு மற்றும் அமலாக்கத்துறை தன்னை ஒரு சாட்சியாக இணைக்க கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான உத்தரவு குறித்த வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பபு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவு.

கடந்த  2001முதல் 2006ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார் அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தனர்.

 இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி மகன்கள் சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வம் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த வழக்கில் தங்களையும் ஒரு சாட்சியாக   இணைக்க கோரி அமலாக்க பிரிவினர் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை 85% முடிவடைந்துள்ளதாலும் 9 5 சாட்சிகள் இதுவரை விசாரிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் அமலாக்க துறையை சேர்த்துக் கொள்ள முடியாது என லஞ்ச ஒழிப்பு துறையினர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பினரும் அமலாக்கத்துறையை இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்க கூடாது என மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர், அமலாக்க துறையின் மனு மீது இன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற இருந்த நிலையில் 

இன்று மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வம் விடுப்பு காரணமாக நீதிமன்றம் வராத காரணத்தினால் மாவட்ட நீதிமன்ற பொறுப்பு நீதிபதி சுவாமிநாதன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை மற்றும் இந்த வழக்கில் அமலாக்கத்துறை தன்னை ஓரு சாட்சியாக இணைக்க கோரி தாக்கல் செய்துள்ள  மனு மீதான வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு ஓத்திவைத்து உத்திரவிட்டார். இன்று இந்த வழக்கு விசாரணைக்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பினர் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *