அரசியல் அதிரடி: ஓ.பி.எஸ் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன்..!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தமிழக அரசு விரைந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி ஓ.பி.எஸ் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் பங்கேற்பு.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டங்களில் அமமுக தொண்டர்கள் பங்கேற்பார்கள் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்  நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பங்கேற்க உள்ளார்.

தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமமுக மற்றும் ஓ‌.பி.எஸ் அணியை சேர்ந்த நகர், ஒன்றியம் பேரூர், சார்பு அணி மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள்,  உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *