ராமர், சீதாவை மணிப்பூர் கலவரத்தோடு சித்தரித்து பிளக்ஸ் பேனர் வைத்ததால் பரபரப்பு…!
இந்து கடவுளான ராமர், சீதா, லட்சுமணன் படங்களை பிளக்ஸ் பேனரில் தவறாக சித்தரித்து வைக்கப்பட்டதால் பரபரப்பு. பிளக்ஸ் பேனர் வைத்தவர்களை கைது செய்யக் கூறி வத்தலகுண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காவல் நிலையத்தை முற்றுக்கையிட்டு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மணிப்பூரில் பெண்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் நிர்வாணமாக ஊர்வலம் நடத்தியதை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறி வத்தலகுண்டு காளியம்மன் கோவில் முன்பாக பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர்.
இந்த பேனரில் இந்து கடவுள்களான ராமர், சீதா மற்றும் லட்சுமணர் இவர்களை சித்தரிக்கும் வண்ணம் படங்களை வெளியிட்டும் ராமராக பிரதமர் நரேந்திர மோடியும் லட்சுமணராக அமித்ஷாவையும் நிர்வாணமாக ஒரு பெண்ணை சீதையாகவும் சித்தரித்து அதை தேசியக் கொடியால் மறைத்தது போல் அவமரியாதை செய்து பிளக்ஸ் பேனர் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வத்தலகுண்டு காளியம்மன் கோவில் சந்திப்பில் வைக்கப்பட்டதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக வத்தலகுண்டு காவல் நிலையத்தில் இந்து முன்னணி கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் அண்ணா துரை தலைமையில் இந்து முன்னணியினர் வத்தலகுண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர் பின்பு பிளக்ஸ் பேனர் வைத்த மனிதநேய மக்கள் கட்சியினரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து கோஷங்களில் எழுப்பினார்கள்.
இது குறித்து பேசிய இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அண்ணாதுரை கூறும் போது வத்தலகுண்டு பகுதியில் இந்து முஸ்லிம்களின் ஒற்றுமையை குலைக்கும் வண்ணம் செயல்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் இது தொடர்பாக புகார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.