பாஜக முறித்துக் கொள்ளும் வரை கூட்டணியில் இருப்போம்… ஓபிஎஸ் ஓபன் டாக்…!
சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்த ஒ பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு தேனி எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் விவகாரத்தில் நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். -ஓபிஎஸ்
மணிப்பூர் கலவரம் குறித்த கேள்விக்கு:
நிரந்தர அமைதி ஏற்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் முயற்சிகள் ஏற்படுத்த வேண்டும். இரண்டு மாதங்களுக்கு முன்பாக இரண்டு பேர் கொடூரமான முறையில் கொலை நடத்தப்பட்டுள்ளது. வரும் காலங்களில் நடைபெறாமல் தடுப்பது அந்த மாநிலத்தின் கடமை, இந்திய அரசின் கடமை.
ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று திண்டுக்கல் சீனிவாசன் உளறியது குறித்த கேள்விக்கு:
அண்ணன் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி எங்கிருந்தாலும் வாழ்க.
தேர்தல் ஆணையம் உங்களை இன்னும் ஒருங்கிணைப்பாளராக வைத்துள்ளது குறித்த கேள்விக்கு:
உங்களுக்கு புரிந்திருக்கிறது புரிய வேண்டியவர்களுக்கு புரியவில்லை.
பாஜகவுடனான கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு:
அவர்களாக முறித்துக் கொள்ளும் வரை நாங்கள் அந்த கூட்டணியில் தொடர்கிறோம்.
திமுக அமைச்சர்கள் மீதான வழக்கு குறித்த கேள்விக்கு:
அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் அதை எதிர் கொண்டு வெற்றி அடைய வேண்டியது அவர்களின் பொறுப்பு.
ஓபிஆர் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்க வழக்கு குறித்த கேள்விக்கு:
நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என ஒ.பன்னீர் செல்வம் கூறினார்.