மோடி, அமித்ஷாவின் பினாமிதான் ஆளுநர் ஆர்.என்.ரவி… சி.பி.எம் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலக்கிருஷ்ணன் திண்டுக்கல்லில் பேட்டி, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணம் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படுத்தாது. மகளிர் உரிமை தொகை வழங்குவதில் அறிவிக்கபட்டுள்ள நிபந்தனைகளை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டும். சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளர் பெரிய சாமி சமூக விரோதிகளால் தாக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பருத்தியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இதுவரை மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் கிடையாது. ஆகவே பருத்தி விவசாயிகளை காக்க தமிழக அரசு பருத்தியை கொள்முதல் செய்ய நடவடிக்கை வேண்டும்.
மோடி, அமித்ஷா பின்புலத்தில் தமிழக ஆளுநர் ரவி செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் தக்காளி விலை உயர்வுக்கு கடந்த சாகுபடி யின் போது போதிய விலை கிடைக்காததால் அதிகளவு இந்த முறை சாகுபடி செய்யப்படவில்லை இதனால் தக்காளி விலை உயர்ந்துள்ளது.
விலை ஏற்றம் குறைவை கட்டுபடுத்த தமிழக அரசு நேரடியாக தலையிட்டு கொள்முதல் செய்து வியாபாரம் செய்தால் மட்டுமே விவசாயிகள் நியாயமான விலை கிடைக்கும் என்பதால் சாகுபடி செய்வார்கள். பொதுமக்களுக்கு நியாயமான விலை கிடைக்கும். அப்போது தான் சம நிலை ஏற்படும் ஆகவே விவசாயிகளிடம் இருந்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவித்தார்