தமிழ்நாட்டில் பள்ளி திறப்பு தேதிகள் மாற்றம்-அமைச்சர் அன்பில் மகேஷ்

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதிகள் மாற்றப்படுவது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தேர்வு நடந்தது. 12ம் வகுப்புகளுக்கு தேர்வு கடந்த மார்ச் 3ம் தேதி நிறைவு பெற்றது.10ம் வகுப்புகளுக்கு தேர்வு கடந்த மார்ச் 30ம் தேதி நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வுகள் நடைபெற்று வந்தன. இந்த இறுதித்தேர்வுகள் ஏப்ரல் 28 உடன் நிறைவு பெற்றது.இதையடுத்து கடந்த 29ம் தேதி முதல் முதல் 1-9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. 30 நாட்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில்… 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அடுத்த வாரம் பள்ளிகள் திறக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் வானிலை மிக மோசமாக சுட்டெரித்து வருகிறது.தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது. சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயரும் வாய்ப்புகள் உள்ளன. நேற்றும் மட்டும் தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் 100 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவானது. அந்த அளவிற்கு மோசமான வானிலை நிலவிக்கொண்டு இருக்கிறது. வானிலை சரியாக ஜூன் 7ம் தேதி வரை ஆகும். அதுவரை வெயில் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்து உள்ளது.இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிபோகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள் உடனே ஏற்கனவே அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். இன்று அவர் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து உள்ளார்.

இன்று மீண்டும் தலைமை செயலாளர் இறையன்பு உடன் அன்பில் மகேஷ் ஆலோசனை செய்வார். அந்த ஆலோசனைக்கு பின்பாக அவர் பள்ளிகள் திறப்பு தேதி குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.வெயில் காரணமாக திறப்பு தேதி தள்ளி போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகளை திறக்க இரண்டு தேதிகளை தேர்வு செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் கூறியுள்ளார். இந்த தேதிகளை முதல்வரிடம் கொடுத்து, முதல்வர் அதில் ஒரு தேதியை தேர்வு செய்வார் என்று அன்பில் மகேஷ் கூறியுள்ளார். பள்ளி திறப்பு குறித்த புதிய தேதி இன்று பெரும்பாலும் மாலை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *