என்ன செய்ய போகிறார் பசவராஜ் பொம்மை! தேர்தலில் வெல்லுமா உண்மை!
ஊடகர் வெங்கட்ராம்.
இந்தியாவில் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் மாநிலத்தில் ஒன்றான கர்நாடக மாநிலத்துக்கு இன்று தேர்தல் நடந்து கொண்டு இருக்கிறது. வடஇந்தியாவை போல தென் இந்தியாவில் எந்த ஒரு வெறுப்பு பிரச்சாரமும் எடுபடாது என்று இந்த தேர்தல் பாஜகவினருக்கு புரியவைக்கும் என்று பரவலான ஒரு பேச்சு எழுந்துள்ளது. ஏனென்றால் கர்நாடகாவில் 40 % கமிஷன் என்கிற காங்கிரஸ் கட்சியின் பாஜகவிற்கு எதிரான தேர்தல் வியூகம் அவர்களுக்கு பரவலான பலன் தந்துள்ளது. ஊழலால் பாதிக்கப்பட்ட அத்தனை பேரும் காங்கிரஸ் கட்சிக்கு பின்னால் அணிவகுத்து நிற்க தொடங்கிவிட்டனர். தென்னிந்தியாவில் கர்நாடகாவில் மட்டும் ஆட்சியை வைத்திருக்கும் பாஜக இந்த தேர்தலில் வெளியேற்றப்பட்டால் மீண்டும் தென்னிந்தியா பாசிசத்துக்கு எதிரான சிம்மசொப்பனமாக கருதப்படும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.