‘எனது வீடு ராகுல் வீடு‘ பிரசாரத்தை எம்.பி. ஜோதிமணி தொடக்கி வைத்தார்

புதுக்கோர்டை மாவட்டம், விராலிமலை பகுதிகளில், ‘எனது வீடு ராகுல் வீடு‘ என்று அச்சடிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை வீடுகளின் முகப்பு பகுதியில் ஒட்டி ராகுல்காந்தி க்கு ஆதரவு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பிரசாரத்தை கரூர எம்.பி.ஜோதிமணி தொடக்கிவைத்தார

ராகுல்காந்தி குடியிருந்த அரசு பங்களாவை காலி செய்ததற்கு எதிராக கரூர மக்களவைத் தொகுதியில் ஒரு லட்சம் வீடுகளில் ‘எனது வீடு ராகுல் வீடு‘ என்று இல்லங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரசாரம் நடைபெற்று வருகிறது 

இதன்ஒரு பகுதியாக கரூர மக்களவை உறுப்பினர ஜோதிமணி விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட  விராலிமலை, இடையபட்டி, கீழக்குறிச்சி, இலுப்பூர் ஆகிய பகுதிகளில் ‘எனது வீடு ராகுல் வீடு‘ ஸ்டிக்கரை வீடுகளில் ஒட்டி, பிரசாரத்தை  தொடக்கி வைத்தார. இதில் திரளான காங்கிரஸார் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *