அதிமுக முக்கிய நபரின் மகன் கோடிக்கணக்கில் ஏமாற்றியதாக பாதிப்பட்டவர் சாகும்வரை உண்ணாவிரம்
திருப்பூரைச் சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணனிடமிருந்து ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக கூறி நத்தபாளையத்தில் விவசாயி குடும்பத்துடன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம். போலீசார் பேச்சுவார்த்தை.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள மூலனூர் நத்தப்பாளையத்தில் முன்னாள் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் வி. பி.பெரியசாமியின் மகன் சின்ன வி.பி.பெரியசாமி மூலனூரில் குகன் பீட்ஸ் என்ற பெயரில் கோழி தீவன உற்பத்தி நிறுவனம் நடத்தி வந்துள்ளார் அப்போது தொழில் ரீதியாக திருப்பூரைச் சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன் (49), என்பவர் இடம் 1, கோடியே 10,லட்சம் ரூபாய் ரொக்க பணம் கடனாக பெற்றுள்ளார்.
பெற்ற ரொக்க பணத்தை நான்கு ஆண்டுகள் கடந்தும் விவசாயி ராமகிருஷ்ணனுக்கு வழங்காததால் பாதிக்கப்பட்ட ராமகிருஷ்ணன் மூலனூர் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் வி.பி. பெரியசாமியின் வீட்டின் முன்பு தந்தை துரைசாமி, மனைவி சித்ரா, மகன்கள் தினேஷ், லோகேஷ், ஆகியோருடன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வருகிறார்.
தனது ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் பணத்தை மூலனூர் அ.தி.மு.க முன்னாள் ஒன்றிய செயலாளர் மகன் சின்ன வி.பி. பெரியசாமி இடம் இருந்து வாங்கி தர வேண்டும் பணத்தை ஏமாற்றிய பெரியசாமி என் குடும்பத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி கடும் வெயிலில் பெரியசாமி வீட்டின் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்து வருகிறார்.
அப்போது மூலனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதிக்கப்பட்ட ராமகிருஷ்ணன் இடத்தில் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இதனால் மூலனூர் நத்தம் பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.