தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்தப்போ என்ன பண்ணீங்க? எதிர்க்கட்சித் தலைவரை பார்த்து முதல்வர் சரமாரி கேள்வி
ஊடகர் வெங்கட்ராம்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அவ்வளவு எளிதில் நாம் மறந்திருக்கமாட்டோம். தூரத்தில் இருந்து குறிவைக்கப்பட்டு குருவியை சுடுவதைப்போல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடந்தது தொலைக்காட்சியில் பார்த்துதான் நானே தெரிந்துகொண்டேன் என்று அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியது அப்போது பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின் அவர் ஆட்சி காலத்திலேயே விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு திமுக ஆட்சி வந்தவுடன் விசாரணை மேலும் துரிதப்பட்டு அறிக்கை வெளியானது. இதை தொடர்ந்து இன்று முதல்வர் எதிர்க்கட்சி தலைவரை நோக்கி சரமாரி கேள்விகளை எழுப்பினார். முதல்வர் பேசுகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார்.? அதனை மட்டும் ஏன் எதிர்க்கட்சி தலைவர் கூற மறுக்கிறார்.? முதலமைச்சராக இருந்தாலும் சொல்ல மறுத்துவிட்டார். இப்போதும் சொல்ல மறுத்துவிட்டார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.மேலும், கொடநாடு கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை இபிஎஸ் மீது முதல்வர் முன்வைத்தார்.