பஹ்ரைன் வரை சென்ற அடிக் அகமது படுகொலை விவகாரம்…பாராளுமன்றம் கண்டனம்.
ஊடகர் வெங்கட்ராம்.
சமீபத்தில் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாகிய ஒரு சம்பவம் தான் உத்தர பிரதேசத்தில் காவலர்கள் மற்றும் ஊடகத்தினர் கண்முன் நடந்த அடிக் அகமது அவர்களின் படுகொலையாகும். அடிக் அகமது மற்றும் அவரின் தம்பி போலீஸ் முன்னிலையில் கொலை செய்யப்பட்டதற்கு பஹ்ரைன் பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவித்துள்ளது. பஹ்ரைனில் இந்தியர்கள் பாதுகாப்பாகவும் மத சுதந்திரத்தோடும் இருந்து வருகினர். நாங்கள் அவைகளை அப்படிதான் நடத்துகின்றோம் ஆனால் இந்தியாவில் இப்போது இஸ்லாமியர்களுக்கு எதிரான ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இதை நாம் வெறும் கண்டனத்தோடு நிறுத்தி விடக்கூடாது. பஹ்ரைனும் வளைகுடா நாடுகளும் இதனை கண்டித்து நாம் வைத்திருக்கும் வணிக ரீதியான தொடர்பில் ஒரு முடிவு எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளது. இந்த அறிக்கையினால் உலக அரங்கில் நம் நாட்டில் நடந்த படுகொலை வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது இது ராஜாங்க ரீதியாக இந்தியாவிற்கு பெரிய பாதிப்பை கொடுக்க வாய்ப்புள்ளது.