எனக்கு முன்னாடி கைகட்டி நின்னவர் கிட்ட நான் கைகட்டி நிக்கனுமா? கடுகடுத்த ஜெகதீஸ் ஷெட்டர்.
ஊடகர் வெங்கட்ராம்.
கர்நாடக தேர்தலில் கலவரம் வராமல் இருக்க வேண்டும் என்று நாம் நினைத்தால், திடீரென்று பாஜக கட்சிக்குள்ளேயே கலவரம் வெடித்துள்ளது. வேட்பாளராக அறிவிக்காத காரணத்தால் கர்நாடகாவை பாஜகவை சேர்ந்த பல பெரிய தலைகள் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகி வருகின்றனர். அதில் குறிப்பிடத்தக்கவர் கர்நாடக முன்னாள் பாஜக முதல்வர் ஜெகதீஸ் ஷெட்டர் தான். அவர் கூறியதாவது “காலாகாலமாக பாஜக கட்சிக்கு உழைத்ததற்கு எனக்கு கிடைத்த பட்டம் சந்தர்ப்பவாதி. பி எல் சந்தோஷ் வார்த்தையை கேட்டு எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. அவரால் கட்சி அகல பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. என்னிடமும் எடியூரப்பா முதல்வராக இருந்தபோதும் எங்களிடம் கை கட்டி வேலைபார்த்த அண்ணாமைலையிடம் நாங்கள் கை கட்டி வேலைபார்க்க வேண்டுமா” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.