நான் வந்துட்டேன்னு சொல்லு… முழுபலத்தோட வந்துட்டேனு சொல்லு…. சொல்லி அடித்த எடப்பாடி.. தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பு..

ஊடகர் வெங்கட்ராம்.

தமிழ்நாட்டு மக்களுக்கு நீண்ட பல மாதங்களாக சரியான ஒரு பரபரப்பை உண்டாக்கிக்கொண்டிருந்தது என்ன விஷயம் எனறு பார்த்தால், அது அதிமுகவின் கட்சி விவகாரமாகத்தான் இருக்கும். ஒன்றாக இருந்த போதும் அவர்கள் ஒன்றாக இல்லை, பிரிந்தும் அவர்கள் ஒன்றானதாக தெரியவில்லை. மாற்றி மாற்றி வழக்கு தொடுத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வந்த பின்னும் ஒரு தெளிவில்லாத நிலையாக சென்று கொண்டே இருந்தது. இந்த அனைத்து குழப்பங்களுக்கும் இப்போது தேர்தல் ஆணையம் ஒரு முடிவு கட்டியுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளராக திரு எடப்பாடி பழனிசாமி அவர்களை அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் இரட்டை இலை சின்னமும் இபிஎஸ் அவர்களிடம் சென்றுவிட்டது. இதனால் வரும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் இபிஎஸ் வேட்பாளர் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *