வாங்கோ.. வாங்கோ… அதிமுகவுக்கு வாங்கோ…மொத்தமாக 200 பேரை சேர்த்த இபிஎஸ்..
ஊடகர் வெங்கட்ராம்.
அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் பொறுப்பேற்றபின் பல்வேறு தடாலடி அரசியல் நடவடிக்கை எடுத்து கொண்டு வருகிறார். அதில் முக்கியமாக பாஜக வில் இருந்து பல நிர்வாகிகளை தன்பக்கம் இழுத்து கொண்டு வருகிறார். இத சமாளிக்க முடியாமல் பாஜக வினர் திணறி வருகின்றனர். இப்போது அதே போல் இன்னொரு சம்பவம் செய்துள்ளார் இபிஎஸ். அமமுக போன்ற பல்வேறு காட்சிகளில் இருந்து மேலும் 200 வழக்கறிஞர்களை தன கட்சியில் சேர்த்துள்ளனர். இதில் பலர் ணைபவம் வாய்ந்த வழக்கறிஞராகவும் பலர் புதிய வழக்கறிஞராகவும் இருக்கின்றனர். இப்படி உறுப்பினர் சேர்க்கையானது பல கட்சி தலைவர்களுக்கு கழகத்தையும் தலைவலியாகவும் மாறியுள்ளது. தொடக்கத்தில் இவரால் என்ன செய்ய முடியும் என்று ஏளனமாக பேசிய அனைவரும் எடப்பாடி அவர்களின் அரசியல் உத்தியை பார்த்து சற்றே ஆடிப்போயுள்ளனர்.