இனி காதுகேளாதோரும் சட்டமன்றத்தில் நடப்பதை கேட்கலாம்…. முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

வெங்கட்ராம்.

செவித்திறன் சவால் உடையவர்களும் சட்டப்பேரவை நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் வகையில் சைகை மொழியில் பதிவு செய்து வழங்கும் நிகழ்வினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தற்போது நடைபெறும் 2023-24-ம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிகழ்ச்சிகளை செவித்திறன் சவால் உடையவர்களும் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் சைகை மொழி பெயர்ப்பாளர் மூலமாக சைகை விளக்க காணொலி தயாரித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை வாயிலாக ஊடகங்களில் ஒளிபரப்பு செய்திட நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார்.

அதன்படி, செவித்திறன் சவால் உடையவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், சட்டமன்றப் பேரவை நிகழ்வுகளின் தொகுப்பு, யூ-டியூப் மூலமாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் ஒளிபரப்பு செய்திடும் வகையில், சைகை மொழியில் பதிவு செய்து வழங்கும் நிகழ்வினை சபாநாயகர் மு.அப்பாவு முன்னிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச்செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *