நாங்க யாருனு நினைசீங்க… கூற்றோம் பாருங்க கூட்டத்தை..

வெங்கட்ராம்.

ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையில் திருச்சியில் வருகிற 24ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் சுமார் 3 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் திருச்சி மாநாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது: திருச்சியில் வருகிற 24-ந்தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா, கட்சி பொன்விழா, மாநாடு ஆகிய முப்பெரும் விழா பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது. அ.தி.மு.க.வின் தலைவரை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என்பது விதி. அதனை யாராலும் மாற்ற முடியாது என்பதை கட்சியின் நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கி தந்திருக்கிறார். அந்த தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதை இந்த மாநாடு நிரூபிக்கும். இதில் மாநிலம் தழுவிய அளவில் 3 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

கட்சி முழுமையாக எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றிருப்பதாக சொல்வதை நாங்கள் நம்பவில்லை. தஞ்சாவூரை எடுத்துக் கொண்டால் 75 சதவீதம் கட்சியினர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் தான் இருக்கிறார்கள். இந்த மாநாடு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்பது வருகிற 24-ந்தேதி நிரூபணமாகும். இவ்வாறு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *