கலாஷேத்ரா விவகாரத்தில் நான்கு ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு…இவ்வளவு நாள் கவனிக்கவில்லையா…அல்லது கண்டுகொள்ளவில்லையா….
வெங்கட்ராம்.
கலாஷேத்ரா பள்ளி விவகாரம் தான் தற்போது உச்சபட்சமாக சென்று கொண்டு இருக்கிறது. திருவான்மியூர் பக்கம் செல்லும் அனைவரும் போக்குவரத்துக்கு நெரிசலை தவிர்ப்பதற்காக மாற்று வழியில் சின்ஹா பள்ளி இருக்கும் பக்கமாக தான் செல்வார்கள் ஆக அனைவருக்கும் இந்த பள்ளி பரிட்சியமே. மத்திய அரசே மரியாதை தரும் அளவுக்கு மதிப்புமிக்க பள்ளியாக கருதப்பட்ட ஒரு நிறுவனத்தில் இப்போது மிகப்பெரிய ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஒருவர் இருவர் என்றாலே சகித்துக்கொள்ள முடியாதபோது நால்வரு மீது குற்றச்சாட்டு எழும் வரையில் நிர்வாகம் என்ன செய்துகொண்டு இருந்தது. அனைத்து மாணவிகள் ஒன்று சேர்ந்து போராடும் அளவுக்கு அவர்களின் கோரிக்கைகள் ஒடுக்கப்பட்டது ஏன். வருடம் ஒரு குற்றம் வெளியில் வர இதன் முடிவு தான் என்ன. காத்திருப்போம்.