எங்களுக்கு எடப்பாடி தான் தலைவர் அண்ணாமலை இல்லை…செல்லூர் ராஜு மாஸ் பேச்சு..

வெங்கட்ராம்.

தேசிய தலைவர்கள் கூடிக்கொள்ள தமிழக தலைவர்கள் இடித்து கொள்ள சென்றுகொண்டிருக்கிறது அதிமுக பாஜக கூட்டணி. பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்கொண்டிருக்கும் வரிசையில் இப்போது செல்லூர் ராஜு ஒரு பேட்டி அளித்துள்ளார். மதுரையில் அ.தி.மு.க., முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரை அரசு மருத்துவமனைப் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் பேட்டியளிக்கையில், “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் அ.தி.மு.க.வுக்கு கிடைத்த அருமையான தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.

அ.தி.மு.கவினர் அவரை பல வடிவங்களில் ரசிக்கிறார்கள். எடப்பாடி மீண்டும் முதல்வராவில்லையே என மக்கள் வருத்தப்படுகிறார்கள்.அண்ணாமலை அவருடைய கருத்தை சொல்லி உள்ளார். தன் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த அவ்வாறு பேசி உள்ளார். எல்லா இடங்களிலும் தொண்டர்களை உற்சாகப்படுத்த இவ்வாறு பேசுவதுண்டு” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *