ஊழல்வாதிகள் ஊரைவிட்டு ஓடிடக்கூடாது சிபிஐ வைர விழாவில் பிரதமர் உரை

வெங்கட்ராம்.

மத்திய புலனாய்வு துறையான சிபிஐ (CBI) இந்தியாவில் 1963ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்த ஆண்டு வைரவிழா ஆண்டை சிபிஐ கொண்டாடி வருகிறது. டெல்லியில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். ஜனநாயகம் மற்றும் நீதிக்கான மிகப்பெரிய தடையாக ஊழல் இருக்கிறது என்றும், ஊழலில் இருந்து இந்தியாவை விடுவிப்பதே சிபிஐயின் முக்கியப் பொறுப்பு என்றும், ஊழல் செய்யும் ஊழல்வாதிகள் யாரும் தப்பி விடக்கூடாது இதுவே நாட்டு மக்களின் விருப்பம் என தெரிவித்தார். தொடர்ந்து நாட்டில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணமும், அதனை செய்யும் ஊழல் வாதிகள் நாட்டை விட்டே மிக எளிமையாக தப்பியோடும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்த வண்ணம் தான் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *