அப்படியே விட்ருவோமா…போராடி ஜெயிப்போம்…ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு

வெங்கட்ராம்.

இரண்டாண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்கிறார். பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவதூறாக பேசியதை தொடர்ந்து குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை தொடர்ந்து அவரின் வயநாடு மக்களவை உறுப்பினர் பதவியும் பறிபோனது. எனவே அவர் இந்த தீர்ப்பு தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் அமர்வு நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகுதிநீக்கம் ராகுலுக்கு பின்னடைவாக கருதினாலும் இது நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைத்து இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருது தெரிவித்து வருகின்றனர். இது வரும் தீர்த்தலில் பாஜக விற்கு பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *