இதுக்கப்புறம் எங்க முப்பெரும் விழா…அதான் மொத்தமா முடிச்சிட்டாங்களே….கப்சிப் ஆனா தர்மயுத்தம் டீம்.
வெங்கட்ராம்.
இரண்டாம் தர்மயுத்தம் ஆரம்பித்தவுடனே தமிழ்நாடே பரபரப்பாக மாறியது. ஆனால் முதல் பார்ட் இல் கிடைத்த ஆதரவு இந்த பார்ட் இல் கிடைத்ததா என்றால் அது சந்தேகமே. இரைட்டை சூழல் துப்பாக்கி இருந்தால் சீக்கிரம் துருபிடித்துவிடும் அதனால் ஒரே பீரங்கி வேண்டும் என்று அந்த ஆயுதக்கிடங்கின் முதலாளிகள் முடிவெடுக்க ஆரம்பமானது இந்த விளையாட்டு. தன மீது இருக்கும் ஆதரவையும் மக்கள் பார்வையை நம் பக்கம் திருப்பவேண்டும் என்ற எண்ணத்திலும் ஒரு பரபரப்பான ஒரு முடிவை எடுத்தார் அந்த தர்மயுத்தம் நாயகன். அதுதான் அதிமுக வின் முப்பெரும் விழா என்கிற அஸ்திரம். இதை எப்படியாவது நடத்திவிட்டால் நாம் தான் உண்மையான அதிமுக என்கிற எண்ணத்தை மக்கள் மத்தியில் உணர்த்திவிடலாம் என்று அந்த தலைமை கணக்கு போடு இருந்தது. ஆனால் நடந்ததோ வேறு ஒன்று. அனைத்து நீதிமன்றத்திலும் எத்தனை முறை மேல் முறையீடு சென்றாலும் அவர்களுக்கு மிஞ்சியது தோல்வி முகம் தான். அதனால் இந்த நிலைமையில் முப்பெரும் விழா நடத்தினால் குறைந்தது அம்பதாயிரம் நபர்களையாவது கூட்டவேண்டும். இப்போது கட்சியினரிடம் செலவு செய்ய அவ்வளவு பணமும் இல்லை . கட்சியும் நம்மிடம் இல்லை. அதனால் ஏன் வீண் செலவு என்று எண்ணி முப்பெரும் விழா திட்டத்தினை இப்போது மிக தூரமாக தள்ளி வைத்துள்ளனர்.