இந்தியாவில் நம்பர் 1 முதல்வர் நம்ப முதல்வர் தான்…ஆ.ராசா ஆருடம்..

வெங்கட்ராம்.

நெல்லை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வள்ளியூரில் முதல்வர் மு. க. ஸ்டாலின் 70- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக துணை பொது செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில்,
“திமுக சார்பில் ஆண்டுதோறும் கொள்கை முழக்க நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இது நமது இயக்கத்தின் பெருமையாகும். திராவிடத்தின் தத்துவம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இது போன்ற கொள்கை முழக்க நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு தலைவர்களின் பிறந்த நாள் விழாவின் போதும் குறிப்பாக தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய பிறந்தநாள் கொண்டாட்டங்களில் இது போன்ற கொள்கை பரப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. தற்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஏன் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்றால் தந்தை பெரியார், அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் திராவிட தத்துவத்தின் குறியீடு ஆவார்கள். இன்று அவர்களின் அடையாளமாக திகழ்பவர் மு.க.ஸ்டாலின் ஆவார். 16 வயதில் இளைஞரணி தொடங்கி, அடுத்து மாவட்ட பிரதிநிதியாக, பொதுச் செயலாளராக, துணைப் பொது செயலாளராக, பொருளாளராக, தலைவராக என படிப்படியாக வளர்ந்து பரிணாம வளர்ச்சி பெற்ற இந்தியாவிலேயே ஒரே முதல்வர் ஸ்டாலின்தான் என நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக துணைப் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *