Breaking High Lights One Line News Page1 Page2 Page3 Politics Special Article Statement Tamil Nadu Trending
ரங்கராஜன் நரசிம்மன் மீது தந்தை பெரியார் திராவிடர் கழகம் புகார்!
வெங்கட்ராம்.
எப்போதுமே ட்விட்டர் தலத்தில் பரபரப்பாகவும் சில சமயங்களில் சர்ச்சையான கருத்துக்களை வெளியிடுபவராகவும் இருப்பவர் தான் ரங்கராஜன் நரசிம்மன்.
அதேபோல் மீண்டும் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் இடஒதுக்கீடு என்பது பிச்சை என்பது போன்ற கருத்தை தெரிவித்துள்ளார். இதற்க்கு பயங்கர கண்டனங்கள் எழுந்தன. மேலும் இதைப்பற்றி தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் இன்று காவல்துறையில் புகாரளித்து அவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது . இடஒதுக்கீடு பற்றி சரியான புரிதலின்றி இதுபோன்ற செய்திகள் வெளியிடுவது சகஜமாக மாறிக்கொண்டு வருகிறது. இந்தியா உலக அரங்கில் உயர்ந்த மற்றும் மரியாதை மிகுந்த நாடாக மாறுவதற்கு இடஒதுக்கீடு ஒரு அடிப்படை காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை.