பிரதமரை தூற்றுபவர்களுக்கு அரசு வீடு எதற்கு? ஒன்றிய அமைச்சர் பேச்சு
வெங்கட்ராம்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி என்ற வார்த்தையை பயன்படுத்தி ஒரு சமூகத்தை இழிவாக பேசியதாக தண்டனை பெறப்பட்டு தகுதி நீங்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் வசித்த அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி மத்திய அரசிடமிருந்து நோட்டீஸ் வந்துள்ளது. இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன.இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் “
அரசு பங்களா ராகுலுக்குச் சொந்தமானது அல்ல, அது சாதாரண மக்களுக்கானது. பிரதமரை தூற்றுபவருக்கு அரசு வீடு எதற்கு என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கேள்வி எழுப்பினார்.
அரசு விதிகளின்படி தகுதிநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரசு வீட்டில் தங்கியிருக்க முடியாது. அவர்களுக்கு வீட்டை காலி செய்ய ஒருமாதம் அவகாசம் அளிக்கப்படும் என்று கூறிய இரானி, ராகுல் மீது மீண்டும் ஒரு கணையை தொடுத்தார்.
பிரதமர் மோடியின் படம் கிழித்தெறியப்படும் என்று ஒரு பத்திரிகை ஆசிரியருக்கு ராகுல்காந்தி உறுதிமொழி அளித்திருந்தார். ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமலே இருக்கும். ஏனெனில் பிரதமர் மோடியின் மிகப்பெரிய பலம் மக்கள்தான்” என்று இரானி குறிப்பிட்டார்.