காலி பண்ணிர்றேன்….இப்போ சந்தோசமா….ராகுல் காந்தி கடிதம்
வெங்கட்ராம்
துக்ளக் சாலையில் உள்ள வீட்டை காலி செய்வதாக மக்களவை செயலருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கமும் செய்யப்பட்டார். அடுத்த சில நாட்களில் டெல்லியில் அரசு பங்களாவை காலி செய்யுமாறும் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியதுடன் பெரும் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.
மக்களவை செயலருக்கு ராகுல் காந்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ” விதிமுறைக்குட்பட்டு துக்ளக் சாலையில் உள்ள வீட்டை காலி செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ராகுல் காந்தி வீட்டைக் காலி செய்யுமாறு விடுக்கப்பட்ட நோட்டீசுக்கு பதில் அளித்துள்ளார். அதில், கடந்த 4 முறையாக மக்களவை உறுப்பினராக இருந்த எனக்கு அங்கு (வீட்டில்) கிடைத்த மகிழ்ச்சியான நினைவுகளுக்கு கடன்பட்டுள்ளேன். எனது உரிமைகள் குறித்து பழி எதுவும் கூறாமல் கடிதத்தில் உள்ள விவரங்களை பின்பற்றி நிச்சயமாக நடப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.