கனடா நாட்டில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்.கனடா தூதரை அழைத்து மத்திய வெளியுறவுத்துறை அதிருப்தி தெரிவிப்பு

வெங்கட்ராம்.

சீக்கியர்களின் சிலரின் கோரிக்கையான காலிஸ்தான் தற்போது மீண்டும் வலுப்பெற தொடங்கியுள்ளது. பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்க தொடங்கியுள்ளன. பஞ்சாப் மற்றும் சில மாகாணத்தை உள்ளடக்கி சீக்கியர்களுக்கு என்று தனி நாடு வேண்டும் என்ற இந்த கோரிக்கை பல வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவ்வப்போது இந்த கோரிக்கை நாடு முழுவதும் பெரிதாக பேசப்படும் பின்பு அது அடங்கிவிடும். தற்போது அந்தக் கோரிக்கை உலகத்தில் உள்ள அனைத்து காலிஸ்தான் ஆதரவாளர்களாலும் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது. மத்திய அரசுக்கு இது பெரும் தலைவலியாக மாறி உள்ளது. இந்நிலையில், கனடா நாட்டில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்களால் தினம் தினம் போராட்டம் வலுப்பெற்று கொண்டு செல்கிறது. இதனை கனடா அரசும் பெரிதாக கண்டு கொள்வது போல் தெரியவில்லை. ஆகையால் இந்திய வெளியுறவுத்துறை கனடா தூதருக்கு அழைப்பு விடுத்து அவருக்கு இந்த போராட்டத்தை பற்றின தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *