ராகுலுக்கு இந்த தண்டனை போதாது….அட யாரு சொல்றா பாருங்க……

வெங்கட்ராம்.

இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அதன் பின்னர், நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தூத்துக்குடியில் வரும் ஏப்ரல் 1 மற்றும் 2ம் தேதிகளில் மாநாடு நடத்தப்படுகிறது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில் நீதிமன்றத்தை நாடி உள்ளோம்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை போதாது லண்டனில் இந்தியாவுக்கு எதிராக பேசியதற்கு அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.தமிழக பட்ஜெட்டில் தென் மாவட்டங்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் வளர்ச்சி அடைய மாநிலங்களாக பிரிக்க வேண்டும்.

மேலும், பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது அவர் எதிர்க்கட்சி தலைவர் போல் செயல்படுகிறார். அவருக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவாக செயல்படும். அதேபோல் திமுக தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூபாய் வழங்குவதாக அறிவித்துவிட்டு தற்போது தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று கூறி வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *