மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல..அதானி பற்றி தொடர்ந்து கேள்வி எழுப்புவேன்..ராகுல் காந்தி ஆவேசம்..
வெங்கட்ராம்.
அதானி மோடி குறித்த தொடர்புகளை பற்றி கேள்வி எழுப்பியதற்காகவே என்னை தகுதி நீக்கம் செய்துள்ளனர் என்று ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். தகுதி நீக்கம் செய்த பின்பு முதல் முறையாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து இருக்கிறார் ராகுல் காந்தி அவர்கள். அதில் அவர் தொடர்ந்து கூறியதாவது ” நான் அதானியை குறித்து கேள்வி எழுப்புவதிலேயே பிரதமர் கண்களில் இருக்கும் பயத்தை காண்கிறேன். என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக மக்களிடம் நியாயம் கேட்பேன். மக்களவையில் எனது குரலை நசுக்கினாலும், மக்களுக்கான எனது குரல் எப்போதும் ஒலிக்கும். நாடாளுமன்றத்தில் என்னை பற்றின பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். இங்கிலாந்தில் பேசியதற்காக மன்னிப்பு கேட்க கூறுகிறார்கள்” என்று கூறினார்.