உஷாரய்யா உஷாரு…கொரோனா வருது உசாரு..மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்.

வெங்கட்ராம்.

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு கர்நாடகா மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மக்கள் அனைவரும் லேசாக அறிகுறி இருந்தாலே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் கொரோனாவால் உயிரிழப்பு தொடங்கியுள்ளது. இதனை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தும் பணிகளை முடக்கி விட வேண்டும். இல்லையென்றால் அது நம் அனைவரையும் வீட்டுக்குள் முடக்கிவிடும். முதல் இரண்டு அலைகளில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களில் இருந்து இன்னும் பலர் மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் மீண்டும் ஒரு கொரோனா அலை வந்தால் நாடு தாங்காது. அதிலிருந்து மீண்டு எழ பல ஆண்டுகள் ஆகிவிடும். கொரோனா பரிசோதனை எண்ணிக்கையும் ஒப்பிட்டு அளவில் திருப்திகரமாக இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. பொதுமக்கள் நாமும் அலட்சியமாக இருக்காமல் பொது இடத்திற்குச் செல்லும் போது குறைந்தபட்சம் முக கவசம் அணி செல்ல வேண்டும் என்பதை மறக்காமல் இருப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *