உஷாராய்யா உஷாரு…திமிரி எழும் திருமா….சைலெண்டா தாக்கப்பட்டாரா சீமான்
வெங்கட்ராம்.
போலி தமிழ் தேசியவாதிகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.இவர் இந்த கருத்தை கூறும் போது நம்முடைய கண்கள் அனைத்தும் சீமான் மீது செல்கிறது. ஹிருமவளவன் கூறியதாவது ” தமிழ் தேசியம் என்று பேசுகிறவர்கள் இனத்தூய்மைவாதம் மட்டுமே பேசுகிறார்கள். சிலர் வடமாநில தொழிலாளர்களை அடித்து விரட்டி விடுவோம், கஞ்சா கேஸ் போடுவோம் எனக் கூறி வருகின்றனர். அதானி, அம்பானி போன்ற முதலீட்டு வந்தேரிகள் அல்லவா எதிர்க்கப்பட வேண்டியவர்கள், விரட்டியடிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களை விட்டுவிட்டு 100 ரூபாய் வாங்க வேண்டிய இடத்தில் 50 ரூபாய்க்கு வேலை செய்து கொண்டு மூன்று வேலை சாப்பிட முடியாமல் ஒருவேளை மட்டும் சாப்பிட்டுவிட்டு தமிழ் முதலாளிகளின் சுரண்டலுக்கு ஆளாக்கப்படும் தொழிலாளர்களை விரட்டுவோம் என கூறுவது எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை. அவர்களே கற்பனை செய்து கொண்டு திராவிடத்தை எதிர்ப்பதாக பெரியாரை எதிர்க்கின்றார்கள். பெரியாரை எதிர்க்கின்றார்கள் என்றால் பார்ப்பனியத்திற்கு துணை போகின்றார்கள் என பொருள். திராவிடம் என்பது சமூக நீதிக்கான அரசியல் ஆரியத்திற்கு எதிரான அரசியல் அதை முதலில் உச்சரித்தது பண்டிதர், அயோத்திதாசர். மேலும் திராவிடத்தை எதிர்க்கக் கூடியவன் பெரியாரை எதிர்க்கக் கூடாது பண்டிதரை தான் எதிர்க்க வேண்டும். ஆரியத்தை எதிர்க்க வேண்டிய இடத்தில் திராவிடத்தை எதிர்க்கின்றார்கள். கோல்வாக்கரை எதிர்க்க வேண்டிய இடத்தில் பெரியாரை எதிர்க்கின்றார்கள். இது திரிபுவாத அரசியல் இத்தகைய போலி தமிழ் தேசிய திரிபுவாதிகளிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என அவர் பேசியுள்ளார். இதற்கு சீமான் ஆதரவாளர்கள் கடுமையாக கண்டனம் செய்து வருகின்றனர்.