பாஜக நிர்வாகிக்கு கடும் தண்டனை….வரலாற்றிலேயே 8 மணி நேரம் சஸ்பெண்ட் செய்த ஒரே கட்சி……..

வெங்கட்ராம்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்த கையோடு பலர் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைய தொடங்கினர். அனைவரும் சொல்லி வைத்ததை போல் அண்ணாமலை மீது பெரும் குற்றச்சாட்டை வைத்து விட்டே விலகினர். இதனால் காண்டான அண்ணாமலை தரப்பு எதிர்வினையை காட்டத் துவங்கியது. அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட அண்ணாமலை ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி நோக்கி கடும் வார்த்தைகளை பயன்படுத்த தொடங்கினர். இதற்கு அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும் எதிர்வினை ஆற்றத் தொடங்கினார். இந்த வார்த்தை விளையாட்டு அடுத்த கட்டத்திற்கு சென்று பாஜகவினர் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்தனர். தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி பாஜக தலைவர் தினேஷ் ரோடியின் தலைமையில் இந்தப் போராட்டம் நடந்தது. இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நேற்று இரவு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் இன்று காலை எழுந்து செய்தியை பார்க்கும் போது அவர் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டார். இது வரலாற்றில் நிகழ்ந்த அரிய நிகழ்வு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *