எம்எல்ஏ சீட் ஒன்றும் உங்கள் குடும்ப சொத்து இல்லை… எடியூரப்பாவுக்கு சிடி ரவி பதில்..
வெங்கட்ராம்.
கர்நாடகத்தில் எடியூரப்பா பிஜேபியின் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார். பிஜேபியின் பாதி வாக்கு வங்கியை எடியூரப்பா என்னும் தனிநபரே வைத்திருந்தார் என்று கூறலாம். அந்த அளவிற்கு பிஜேபியின் முகமாக இருந்தார். இரண்டு ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த பின் எடியூரப்பா அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரின் சமூகத்தைச் சேர்ந்த பசவ ராஜ் பொம்மை அவர்களையே முதல்வராக அமர வைத்தனர். இந்நிலையில் எடியூரப்பா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட போவதாக அறிவித்தார். நான் அரசியலில் இருந்து விலகினாலும் என் மகன் விஜயேந்திர சிகாரிப்புரா தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறினார். அவர் எந்த எண்ணத்தில் கூறினாரோ ஆனால் இந்த விவரம் டெல்லி தலைமை வரை சென்று விட்டது. தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி கூறியதாவது ‘ எம் எல் ஏ சீட் யாருக்கு எப்போது கொடுக்க வேண்டும் எங்கே கொடுக்க வேண்டும் என்று தலைமை தான் முடிவு செய்யும் இதை யாரும் அவர்கள் வீட்டுக்கு கிச்சனில் உட்கார்ந்து முடிவெடுக்க கூடாது’ என்று கூறினார். இது எடியூரப்பா ஆதரவாளர்களை கொந்தளிக்க செய்துள்ளது. ஆயிரம் இருந்தாலும் எடியூரப்பா ஒரு மூத்த தலைவர். கட்சியினரின் எழுச்சிக்காக ஒரு சில கருத்துக்களை கூறியிருப்பார். அதில் இருக்கும் தவறுகளை அவரிடம் தனியாக சுட்டிக் காட்டி இருக்கலாம். இது போல் பொது தளத்தில் அவரை விமர்சித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று முணுமுணுக்கின்றனர்