எச். ராஜாவுக்கு கருப்புக் கொடி… விசிகவினர் கைது…

விசிக தலைவர் திருமாவளவனை தரம் தாழ்த்தி நேற்று எச். ராஜா பேசியதை கண்டிக்கும் வகையில் இன்று சோழபுரம் வந்திருந்த எச் ராஜாவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம். கருப்புக்கொடி காட்டிய 10 பேர் கைது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை நேற்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா தரம் தாழ்த்தி விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டிக்கும் வகையில் இன்று கும்பகோணம் அருகே சோழபுரத்திற்கு வழிபாடு நடத்த வந்த எச் ராஜா வழிபாடு முடித்து வீடு திரும்பும் போது சோழபுரம் கடை வீதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்பு துணியை காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் நிலவியது. இதனை தொடர்ந்து கருப்புக்கொடி காட்டிய 10 விசி கவினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *