கல்வித்துறையில் வேலை கன்பார்ம்…! மோசடி செய்த அதிமுக முக்கிய புள்ளி கைது…!
தமிழக கல்வித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ10 லட்சம் மோசடி செய்த அதிமுக நிர்வாகி கைது போலீஸ் விசாரணை. கடந்த அதிமுக ஆட்சியின் போது திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக மீனவர் அணி ஒன்றிய செயலாளர் மணி வயது 55 தனக்கு ஆளும் அதிமுக அரசில் செல்வாக்கு உள்ளது என்றும் ஆகையால் தமிழக கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் வேலை வாங்கி தருவதாக திண்டுக்கல் மாசிலாமணிபுரத்தை சேர்ந்த எலிசபெத் என்பவரிடம் கூறியுள்ளார் இதனை உண்மையான நம்பிய எலிசபெத் மணியிடம் ஆறு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை கடந்த 2020 ஆம் ஆண்டு கொடுத்துள்ளார்.
அதேபோல் நத்தத்தை சேர்ந்த சகுந்தலா என்பவரிடமும் கல்வித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 4 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால் இரண்டு பேருக்கும் வேலை வாங்கி தராமல் மணி ஏமாற்றி வந்துள்ளார். இரண்டு பேரிடமும் சேர்த்து ரூ பத்து லட்சத்து 25 ஆயிரம் மோசடி செய்துள்ளார். இது குறித்து சகுந்தலா மற்றும் எலிசபெத் ஆகியோர் பலமுறை கேட்கும் பணத்தை திருப்பி தரவில்லை
இதனால் பாதிக்கப்பட்ட எலிசபெத் கடந்த 11.07. 22 அன்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த அதிமுகவை சேர்ந்த மணி மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தருமாறு புகார் மனு அளித்தார் புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் தன்னை தேடி வருவதை அறிந்த மணி தலைமறைவானார்
இதனிடையே மணி நத்தம் குரும்பப்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு அடிக்கடி இரவு நேரங்களில் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனை அடுத்து இன்று 15.03.23 அதிகாலை வீட்டில் வைத்து மணியை போலீசார் கைது செய்தனர் மேலும் இதுபோல் வேறு யாரிடமும் மோசடி செய்துள்ளாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.