எச். ராஜா பொதுக்கூட்டத்திற்கு போலீசார் தடை… 300 பாஜகவினர் கைது..!

திண்டிவனத்தில் இன்று மாலை பாஜக முன்னணி தலைவர் எச். ராஜா தலைமையில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்திருந்த 300 பாஜகவினர் கைது

ஒன்றிய பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று மாலை திண்டிவனத்தில் நடைபெறும் என பாஜகவினர் அறிவித்திருந்தார் கூட்டத்திற்கு பாஜக முன்னணி தலைவர்களில் ஒருவரான எச். ராஜா சிறப்புரை ஆற்ற உள்ளார் என அறிவித்திருந்தது. இதற்கு விசிக தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல்துறையிடம் மனு அளித்து இருந்தனர். 

இதனை தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு காவல்துறை தரப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது இதைத் தொடர்ந்து. பாஜக பொதுக்கூட்டம் நடைபெற இந்த  இடத்திற்கு வந்திருந்த 300 பாஜகவினரை விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா தலைமையிலான போலீசார் கைது செய்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *