24X7 மக்களைப் பற்றி சிந்திக்கும் முதல்வர்… அமைச்சர்கள் பெருமிதம்…!
24 மணி நேரம் மக்களைப் பற்றி சிந்திக்கும் ஒரே முதல்வர் என இரண்டு அமைச்சர்கள் புகழாரம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடியில் திமுக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் பங்கேற்பு.
தமிழகம் முழுவதும் திமுக தலைவருமான முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கி அருகே மணமேல்குடி வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் சக்தி ராமசாமி தலைமையில் முதல்வரின் பிறந்தநாள் விழா கூட்டத்தில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
அப்போது பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கின்ற ஒரே முதல்வர் என்று பெருமிதம்.பின்பு பேசிய சட்டத்துறை அமைச்சர் தமிழகத்தில் பாஜக அதிமுக வைத்துக் கொண்டு எதுவுமே செய்ய முடியாது என பேசினார். முன்னதாக நடைபெற்ற பட்டிமன்றத்தில் எந்த ஒரு சூழ்நிலை மக்களுக்காக வீரமும் ஈரமும் கொண்ட உழைக்கின்ற ஒரே முதல்வர் தளபதியார் மட்டுமே என பட்டிமன்றத்தில் புகழாரம்.
நிகழ்ச்சி ஏற்பாட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சக்தி ராமசாமி மற்றும் மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திகேயன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.