ஒன்னு மாத்துனா போதும்….மத்ததெல்லாம் தன்னால மாறிடும்….
வெங்கட்ராம்.
வாடகை வீடு வைத்துக் கொண்டு அடிக்கடி வீடு மாறுபவர்களா நீங்கள்? அப்படி என்றால் இந்த செய்தி உங்களுக்கு தான். நம் நாட்டில் வாடகை வீட்டில் குடி இருப்பவர்களின் கஷ்டம் பெரும்பாடாக உள்ளது. அவர்கள் ஒவ்வொரு முறை வீடு மாறும் போதும் அவர்களிடம் இருக்கும் அனைத்து அடையாள அட்டை மற்றும் மாவட்டங்களில் விலாசத்தை மாற்றுவதற்குள் அவர்களுக்கு வாழ்க்கையே வெறுத்து விடும். ஒவ்வொரு அடையாள அட்டைக்கும் தனித்தனி அலுவலகம் சென்று ஒவ்வொன்றிற்கும் தனித்தனி ஆவணங்களை சமர்ப்பித்து மாற்ற வேண்டும். இது சற்று கடினமான வழியாகவே இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது அதற்கு மத்திய அரசு ஒரு தீர்வு கொண்டு வர ஆலோசித்துக் கொண்டிருக்கிறது. ஆதார் அட்டையில் மாற்றம் செய்தாலே அனைத்து ஆவணங்களும் தன்னால் மாறிக்கொள்ளும் ஒரு அமைப்பை கொண்டு வர மத்திய அரசு ஆலோசனையில் உள்ளது. இது போன்ற ஒரு நல்ல திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் மக்களுக்கு தேவையில்லாத அலைச்சல் குறையும். ஏதேனும் முக்கியமான காரியம் செய்யும்போது தேவையற்ற குழப்பங்கள் வருவதை அறவே தவிர்க்கலாம். இது வாடகைக்கு குடியிருப்போர் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெறும். முக்கியமாக இது ஊழலை தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கும். இந்தத் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்பதே சாதாரண மக்களின் கோரிக்கை ஆகும்.