ஈபிஎஸ் கூட்டத்தில் முன்னாள் அமைச்சருக்கு இரத்த காயம்… பரபரப்பில் அதிமுக…!

சிவகங்கையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு புதுக்கோட்டை வழியாக திருச்சி விமான நிலையத்திற்கு சென்ற அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புதுக்கோட்டை கட்டியாவயலில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் மயிலாட்டம் மானாட்டம் கட்டைக்கால் ஆட்டம் தப்பாட்டம் குதிரை நடனத்துடன் வானவேடிக்கை மூலமாக உற்சாக வரவேற்பு, 

இபிஸ்க்கு விமான நிலையத்திற்கு செல்ல நேரமானதால் அவசரம் அவசரமாக அதிமுக தொண்டர்களை சந்தித்தபோது தொண்டர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் விஜயபாஸ்கர் மைக்கில் பேசும்போது கூட்ட நெரிசலில் மைக் தட்டிவிடப்பட்டதால் மைக் இடித்து விஜயபாஸ்கருக்கு உதட்டில் அடிபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

சிவகங்கையில் அதிமுக சார்பில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புதுக்கோட்டை வழியாக திருச்சி விமான நிலையத்திற்கு சென்றார்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு செல்லும் என்று அறிவித்து இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது உறுதியான பிறகு முதல் முறையாக வருவதால் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ராமேஸ்வரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை கட்டியவயலில் மயிலாட்டம் மானாட்டம் கட்டைக்கால் ஆட்டம் தப்பாட்டம் குதிரை நடனத்துடன் வானவேடிக்கை மூலமாக உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது ‌ 

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி விமான நிலையத்திற்கு செல்ல நேரமானதால் அங்கு அமைக்கப்பட்ட மேடை மீது ஏறி அவசர அவசரமாக அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்களை அவர் சந்தித்தார். அப்போது அவருக்கு சால்வை கொடுத்தும் பூங்கொத்து கொடுத்தும் அவரின் காலில் விழுந்தும் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்ற நிலையில் அதிமுக தொண்டர்களை அவசர அவசரமாக மேடையில் இருந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அனுப்பியதால் கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மைக்கை பிடித்து பேசும்போது கூட்ட நெரிசலில் அவர் பேசும் மைக்கை தட்டி விட்டதால் அந்த மைக் விஜயபாஸ்கரின் உதட்டில் இடித்து காயம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

பின்னர் காயம் அடைந்த உதட்டை சரி செய்து விட்டு மீண்டும் பேசி எடப்பாடி பழனிச்சாமி வாழ்க என்று முழக்கத்தை எழுப்பினார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்கள் அனைவரையும் சந்தித்து விட்டு அவசர அவசரமாக திருச்சி விமான நிலையத்திற்கு சென்றார்.‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *