என்எல்சி கடையடைப்பு போராட்டத்தில் போலீஸ் வாகனம் தீ வைத்து எரிப்பு…!

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தை கண்டித்து நேற்று பாமக கட்சியினர் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தினர் இதில் பேருந்துகள் காவல்துறை உதவியுடன் இயங்கின கடைகள் திறந்து இருந்தன இந்த நிலையில் கடலூர் மாவட்டத்திற்கு பாதுகாப்புக்காக பல மாவட்டத்திலிருந்து 7000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் 

இந்த நிலையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அதிவிரைவு படை வாகனம் வடக்குத்து பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் நேற்று இரவு வாகனத்தை நிறுத்திவிட்டு காவல்துறையினர் தனியார் திருமண மண்டபத்தில் தங்கி இருந்தனர் இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென்று வாகனம் எரிந்துள்ளது இதனை அறிந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் பின்னர் தீயணைப்பு துறை உதவியுடன் தீயை அனைத்தனர் 

இதனால் அதிவிரைவுப்படை வண்டி வானம் முன் பகுதி முற்றிலும் சேதம் அடைந்தது இந்த தீ யாராவது மர்மநபர்களெ வைத்தார்களா இல்லை வண்டியில் பேட்டரி கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்ததா என்று பல கோணங்களில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *